அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே.
(திருவாய்மொழி - 1-8-4)

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலிமண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
(பெரிய திருமொழி - 6-8-1)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநறையூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 5

கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே.
(பெரிய திருமொழி - 6-5-1)

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே.

(பெரிய திருமொழி - 6-5-1)

திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்யகண்ணா !
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா !
ஒருவற்காற்றி உய்யும்வகை என்றால்
உடனின்றைவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்,
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.
(பெரிய திருமொழி - 7-7-1)

உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற*
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத் தம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்ற தாமென சிந்தனையே !

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனையே !

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி, எறிஞர் அரணழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை, உலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.
(பெரிய திருமொழி - 6.10.1)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 3

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

(திருவாய்மொழி - 3.3.8)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருவனந்தபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 2

கெடும் இடராய வெல்லாம் 'கேசவா !' என்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே.

(திருவாய்மொழி - 10.2.1)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட

காலை மாலைகம லமலர் இட்டுநீர்

வேலைமோ தும்மதில் சூழ்திருக் கண்ணபுரத்து

ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட

காலை மாலை கமல மலர் இட்டுநீர்

வேலை மோதும் மதில் சூழ் திருக்கண்ணபுரத்து

ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை
எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி 8-9-1)

Divyaprabandham

Glory to Sriman Narayana !

www.divyaprabandham.org is a non-commercial website that intends to inculcate bhakthi or devotion towards Sriman Narayana and His devotees. The website imbibes the spirit of glorious sages like Bhagavath Sri Ramanuja, who proclaimed the Narayana mantra to the entire world, and the spirit of recent time saints like Shri Ramakrishna Paramahamsa who suggested bhakthi (or) devotion as the easiest means for this age for realizing God. Please note that though the website promotes Divya Prabandham, the website is not tied to any particular organization (or) caste (or) religious sect. The website is meant for all the devotees of the Lord and has no bias towards any particular caste/religion/sect.

Glory to Azhvars ! Glory to Sri Ramanuja !
Glory to Shri Ramakrishna Paramahamsa !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com