அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திரு இந்தளூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்
இம்மைக்கின்பம் பெற்றோமெந்தா யிந்தளூரீரே !
எம்மைக்கடிதாக் கருமமருளி யாவாவென்றிரங்கி
நம்மையொருகால் காட்டி நடந்தால் நாங்களுய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே !
எம்மைக் கடிதாக் கருமம் அருளி "ஆவா!" என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே !
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் !
பாடா வருவேன் வினையாயின பாற்றே.
(பெரிய திருமொழி - 4.7.5)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருவெள்ளறை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 3

முன்னிவ் வேழுல குணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுதேத்த*
அன்ன மாகியன் றருமறை பயந்தவனே ! எனக் கருள்புரியே *
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்*
தென்ன என்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே !
(பெரிய திருமொழி - 5.3.8)

முன் இவ்வேழுலகு உணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அருமறை பயந்தவனே ! எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்றிவை வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே !

(பெரிய திருமொழி  5-3-8)

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலிமண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
(பெரிய திருமொழி - 6-8-1)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநறையூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 5

கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே.
(பெரிய திருமொழி - 6-5-1)

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே.

(பெரிய திருமொழி - 6-5-1)

திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்யகண்ணா !
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா !
ஒருவற்காற்றி உய்யும்வகை என்றால்
உடனின்றைவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்,
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.
(பெரிய திருமொழி - 7-7-1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி, எறிஞர் அரணழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை, உலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.
(பெரிய திருமொழி - 6.10.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை
எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி 8-9-1)

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் !
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே !
(பெரிய திருமொழி 7-9-1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநைமிசாரண்யம்

பாசுர எண்: 998
பெரிய திருமொழி : 6

வாள் நிலா முறுவல், சிறு நுதல், பெருந்தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்; எண்ணினேன்; எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com