அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்

ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்

மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே.

When the other good ladies saw the Universe in his mouth, they
exclaimed with glee, "this is no ordinary cowherd-child, but the blessed lord himself, endowed with all the auspicious qualities".

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்

எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே.
(பெரியாழ்வார் திருமொழி - 8)
After ten days and two, the cowherds erected festooned pillars on all four sides then lifted the child from the cradle, singing "The-prince-who-lifted-the wild elephants-mountain-against-a-hailstorm!"

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்.
(பெரியாழ்வார் திருமொழி - 9)
Lay him in the cradle, and he kicks like it would break; take him to the
waist, and he clings like a wench; hold him in front and he trounces
the belly. I can bear it no more, Ladies, I am exhausted!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.
(பெரியாழ்வார் திருமொழி - 10)
These sweet songs of Vishnuchitta who wears the bright Vedic thread
speak of the birth of the eternal Lord Narayana in famed Tirukkottiyur,
surrounded by fertile paddy fields. Those who master it will gather no sin.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி ஏழ, கூர்உகிரால் குடைவாய் மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி; மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே ! ஆள ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை , ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

நம்முடை நாயகனே ! நான்மறையின் பொருளே ! நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே ! வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருபவனே ! அம்ம ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

வானவர்தாம் மகிழ, வன் சகடம் உருள, வஞ்ச முலைப்பேயின் நஞ்ச்ம் அது உண்டவனே ! கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் கன்றுஅது கொண்டு எறியும் கருநிற என்கன்றே தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை ; எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் ! முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்து அணிஆர் மொய்குல்கள் அலைய, அத்த ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

காய மலர்நிறவா ! கருமுகில் போல் உருவா ! கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர ! என்சிறுவா ! துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே ! ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி, அழித்து ஆடிய தாளிணையாய் ! ஆய ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

துப்பு உடை ஆயர்கள்தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நல் தோகைமயில் அனைய நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே ! தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனிஒரு தேர் கடவித் தாயொடு கூட்டியஎன் அப்ப! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com