அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய

வேய்த் தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து

ஈத்த தமிழ்இவை ஈரைந்தும் வல்லவர்

வாய்த்த நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி

பொய்ச் சூதிற் தோற்ற பொறைஉடை மன்னர்க்காய்,

பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த

அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்

பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய, பார்த்தன்

சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்

அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்

பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய, பார்த்தன்

சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்

அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன்

தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி

வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற

ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இருட்டில் பிறந்து போய் , ஏழை வல் ஆயர்

மருட்டைத் தவிர்ப்பித்து, வன் கஞ்சன் மாளப்

புரட்டி, அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட

அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சேப்பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு

ஆப்பூண்டு, நந்தன் மனைவி கடை தாம்பால்

சோப்பூண்டு; துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று

ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் ;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச்

சொப்படத் தோன்றி, தொறுப்பாடியோம் வைத்த

துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய

அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் ;
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தத்துக் கொண்டாள் கொலோ ? தானே பெற்றாள் கொலோ ?

சித்தம் அனையாள் அசோதை இளஞ் சிங்கம்

கொத்துஆர் கருங்குழற் கோபால கோளரி

அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் ;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி, வன்கான் அடை

அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் ;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com