கலைவாழ் பிணையோ டணையும்* திருநீர்-
மலைவா ழெந்தை மருவு மூர்போல்*
இலைதாழ் தெங்கின் மேல்நின்று* இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூடலூரே.

(பெரிய திருமொழி - 5.2.8)

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்
மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்க்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே.

(பெரிய திருமொழி - 5.2.8)

kalaivaazh piNaiyOdu aNaiyum thiruneer
malaivaazh endhai maruvum oorpOl
ilai thaazh thengin mEl ninRu iLneer
kulai thaazh kidangin koodalUre.

The Lord who resides in Thiruneermalai, where deer-pairs rest together, has come to reside in Kudalur where coconut bunches hang low on trees, over leaves of the betel creeper that surrounds it.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி - 8.9.4)

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி - 8.9.4)

mikkaanai maRaiyaay virindha viLakkai ennuL
pukkaanai pugazhsEr poliginRa ponmalaiyai
thakkaanai kadigai thadankundrin misaiyirundha
akkaara kaniyai adaindhuindhu pOnEnE
(periya thirumozhi - 8.9.4)

The sweet Lord residing on the hill of Kadigai (and also in Kannapuram) is the transcendant one; He is verily the expanse of light in the form of Vedas, dispelling darkness from our hearts; and He is the Lord in my own heart; He shines as a resplendant golden mountain and is celebrated by one and all for His auspicious qualities; Benevolent and full of grace, He is cherished like a sweet fruit by His devotees. Having attained Him, my life has been saved (from worldly desires and worries).

கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும்* காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்
தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும்*
பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.

(பெரிய திருமொழி - 4.8.1)

கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும்* காமருசீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
(பெரிய திருமொழி - 4.8.1)

kavala yaanai kombu osiththa kannan enrum* kaamaruseer
kuvalai megam anna meni konda kOn en aanai endrum
thavala maada needu naangai thaamaraiyaal kelvan endrum*
pavala vaayal en madandhai paarththan palli paaduvaale.
(Periya Thirumaozhi - 4.8.1)

'Rutted elephant's tusk remover - Kanna, most adorable Lord !', 'O ! Lotus hued Lord!', ' O ! Hue of dark cloud !', 'My King !', 'My elephant-like majestic Master !' 'In the town of Nangai, famous for white colored skyscrapper mansions, my Lord of Lotus Dame !' -- So sings my tender daughter, through her lips of coral hue, on the Lord of Paarththan-Palli. (Rutted elephant refers to the elephant, Kuvalayapeedam, sent by Kamsa to kill Krishna.)

Thirumangai Azhwar imagines himself as both the mother and the devotional daughter in this pasuram.

தாவளந்துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு
நாவள
ம் நவின்றங்கேத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் !
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடிமேய கண்ணனே ! களைக்கணீயே.

(பெரிய திருமொழி - 4.6.1)

தாவளந்து உலகம் முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு
நாவளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் !
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய கண்ணனே ! களைக்கண் நீயே.
(பெரிய திருமொழி - 4.6.1)

thaavalandhu ulagam muttrum thadamalar poigai pukku
naavalam navinru angu yetha naagaththin nadukkam theerththaai
maavalam perugi mannum maraiyavar vaazhum naangai
kaavalampaadi meya kannane ! kalaikkan neeye.
(Periya Thirumozhi - 4.6.1)

O,Krishna ! You took the whole earth in one stride. You entered the lotus tank and saved the chanting devotee elephant ! You reside with knowledge-wealthy Vedic seers in Nangur's Kavalampadi. You are my sole refuge !

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கூடலூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 2

தாந்தம் பெருமை யறியார்* தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்*
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்*
கூந்தல் கமழும் கூடலூரே.
(பெரிய திருமொழி - 5.2.1)

 

தாம் தம் பெருமை அறியார்* தூது
வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல் மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும் கூடலூரே.
(பெரிய திருமொழி - 5.2.1)

 

அறிவ தரியான் அனைத்துலகும்
உடையான் என்னை யாளுடையான்*
குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமருமிடம்*
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட*
பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
புள்ளம் பூதங்குடிதானே.

(பெரிய திருமொழி - 5.1.1)
 

அறிவது அரியான் அனைத்து உலகும்
உடையான் என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய
கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்
புள்ளம் பூதங்குடி தானே.
(பெரிய திருமொழி - 5.1.1)

aRivadhu ariyaan anaithu ulagum
udaiyaan ennai aaludaiyaan
kuRiya maaNi uruvaaya
kooththan manni amarumidam
naRiya malarmEl surumbaarkka
ezhilaar majjnai nadamaada
poRikoL siRaivaNdu isai paadum
puLLam boothamkudi thaane.

(periya thirumozhi - 5.1.1)

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெயுண் டொருகால்
ஆலிலை வளர்ந்த எம்பெருமான்*
பேய்ச்சியை முலையுண் டிணைமரு திறுத்துப்
பெருநிலம் அளந்தவன் கோயில்
காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்குமாம் பொழில்களின் நடுவே*
வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளி யங்குடி அதுவே.
(பெரிய திருமொழி - 4.10.1)

 

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்
பெருநிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளியங்குடி அதுவே.
(பெரிய திருமொழி - 4.10.1)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திரு இந்தளூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்
இம்மைக்கின்பம் பெற்றோமெந்தா யிந்தளூரீரே !
எம்மைக்கடிதாக் கருமமருளி யாவாவென்றிரங்கி
நம்மையொருகால் காட்டி நடந்தால் நாங்களுய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே !
எம்மைக் கடிதாக் கருமம் அருளி "ஆவா!" என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே !
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் !
பாடா வருவேன் வினையாயின பாற்றே.
(பெரிய திருமொழி - 4.7.5)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருவெள்ளறை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 3

முன்னிவ் வேழுல குணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுதேத்த*
அன்ன மாகியன் றருமறை பயந்தவனே ! எனக் கருள்புரியே *
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்*
தென்ன என்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே !
(பெரிய திருமொழி - 5.3.8)

முன் இவ்வேழுலகு உணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அருமறை பயந்தவனே ! எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்றிவை வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே !

(பெரிய திருமொழி  5-3-8)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com