அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3191
முதல் திருவந்தாதி

மயங்க, வலம்புரி வாய் வைத்து, வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை, முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ, திருமாலே !
போர் ஆழிக் கையால் பொருது?
(முதல் திருவந்தாதி - 8)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3192
முதல் திருவந்தாதி

பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல் கிடந்தது அன்றே -- விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் !
(முதல் திருவந்தாதி - 9)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3193
முதல் திருவந்தாதி

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர்; எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவு உண்டோ உன் வாய்?
(முதல் திருவந்தாதி - 10)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com