அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திரை பொரு கடல் சூழ் திண்மதிள் துவரை

வேந்து தன் மைத்துனன் மார்க்காய்

அரசினை அவிய அரசினை அருளும்

அரி புருடோத்தமன் அமர்வு;

நிரை நிரையாக நெடியன யூபம்

நிரந்திரம் ஒழுக்குவிட்டு இரண்டு

கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வட திசை மதுரை சாளக்கிராமம்

வைகுந்தம் துவரை அயோத்தி

இடம் உடை வதரி இடவகை உடைய

எம் புருடோத்தமன் இருக்கை;

தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்

தலைப் பற்றிக் கரை மரம் சாடிக்

கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்

மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை

ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய

எம் புருடோத்தமன் இருக்கை;

மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி

மூன்றினில் மூன்று உரு ஆனான்

கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரை மேல்

கண்டம் என்னும் கடி நகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து

உறை புருடோத்தமன் அடிமேல்

வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன்

விட்டுசித்தன் விருப்பு உற்றுத்

தங்கிய அன்பால் செய் தமிழ்மாலை

தங்கிய நா உடையார்க்குக்

கங்கையில் திருமால் கழலிணைக் கீழே

குளித்திருந்த கணக்கு ஆமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மா தவத்தோன் புத்திரன் போய்

மறிகடல்வாய் மாண்டானை

ஓதுவித்த தக்கணையா

உருவுருவே கொடுத்தான் ஊர்;

தோதவத்தித் தூய் மறையோர்

துறைபடியத் துளும்பி எங்கும்

போதில் வைத்த தேன் சொரியும்

புனல் அரங்கம் என்பதுவே.


அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த

பிள்ளைகளை நால்வரையும்

இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து

ஒருப்படுத்த உறைப்பன் ஊர்;

மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார்

வருவிருந்தை அளித்திருப்பார்

சிறப்பு உடைய மறையவர் வாழ்

திருவரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மருமகன்தன் சந்ததியை

உயிர்மீட்டு மைத்துனன்மார்

உருமகத்தே வீழாமே

குருமுகமாய்க் காத்தான் ஊர்;

திருமுகமாய்ச் செங்கமலம்

திருநிறமாய்க் கருங்குவளை

பொரு முகமாய் நின்று அலரும்

புனல் அரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்

கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு

ஈன்று எடுத்த தாயரையும்

இராச்சியமும் ஆங்கு ஒழிய,

கான் தொடுத்த நெறி போகிக்

கண்டகரைக் களைந்தான் ஊர்;

தேன் தொடுத்த மலர்ச் சோலைத்

திருவரங்கம் என்பதுவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெருவரங்கள் அவைபற்றிப்

பிழக்கு உடைய இராவணனை

உரு அரங்கப் பொருது அழித்து இவ்

உலகினைக் கண்பெறுத்தான் ஊர் ;

குரவு அரும்பக் கோங்கு அலரக்

குயில் கூவும் குளிர் பொழில் சூழ்

திருவரங்கம் என்பதுவே

என் திருமால் சேர்விடமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கீழ் உலகில் அசுரர்களைக்

கிழங்கிருந்து கிளராமே

ஆழி விடுத்து அவருடைய

கரு அழித்த அழிப்பன் ஊர் ;

தாழைமடல் ஊடு உரிஞ்சித்

தவள வண்ணப் பொடி அணிந்து

யாழின் இசை வண்டினங்கள்

ஆளம் வைக்கும் அரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com