அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருவல்லிக்கேணி

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 3

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்தன் தேர்முன் நின்றானை* சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோ ராளரியாய்* அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்* பைங்கண் ஆனைக்கொம்புகொண்டு பத்திமையால்* அடிக்கீழ்ச் செங்கண் ஆளி யிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநைமிசாரண்யம்

பாசுர எண்: 998
பெரிய திருமொழி : 6

வாள் நிலா முறுவல், சிறு நுதல், பெருந்தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்; எண்ணினேன்; எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் !

பாசுர எண்: 988
பெரிய திருமொழி : 5

கலையும் கரியும் கரிமாவும் திரியும் கானம் கடந்து போய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து மலை கொண்டு அலை நீர் அணை கட்டி, மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலைபத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே !

முற்ற மூத்து, கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து, இற்றகால் போல், தள்ளி, மெள்ள இருந்து அங்கு இளையாமுன், பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு, உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே. (பெரிய திருமொழி - 1.3.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 958
பெரிய திருமொழி : 2

வாலி மாவலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள், ஆலி மா முகில் அதிர்தர, அருவரை அகடு உற, முகடு ஏறி பீலி மாமயில் நடம்செயும் தடஞ்சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே ! (பெரிய திருமொழி - 1.2.1)

கலைவாழ் பிணையோ டணையும்* திருநீர்-
மலைவா ழெந்தை மருவு மூர்போல்*
இலைதாழ் தெங்கின் மேல்நின்று* இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூடலூரே.

(பெரிய திருமொழி - 5.2.8)

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்
மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்க்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே.

(பெரிய திருமொழி - 5.2.8)

kalaivaazh piNaiyOdu aNaiyum thiruneer
malaivaazh endhai maruvum oorpOl
ilai thaazh thengin mEl ninRu iLneer
kulai thaazh kidangin koodalUre.

The Lord who resides in Thiruneermalai, where deer-pairs rest together, has come to reside in Kudalur where coconut bunches hang low on trees, over leaves of the betel creeper that surrounds it.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி - 8.9.4)

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி - 8.9.4)

mikkaanai maRaiyaay virindha viLakkai ennuL
pukkaanai pugazhsEr poliginRa ponmalaiyai
thakkaanai kadigai thadankundrin misaiyirundha
akkaara kaniyai adaindhuindhu pOnEnE
(periya thirumozhi - 8.9.4)

The sweet Lord residing on the hill of Kadigai (and also in Kannapuram) is the transcendant one; He is verily the expanse of light in the form of Vedas, dispelling darkness from our hearts; and He is the Lord in my own heart; He shines as a resplendant golden mountain and is celebrated by one and all for His auspicious qualities; Benevolent and full of grace, He is cherished like a sweet fruit by His devotees. Having attained Him, my life has been saved (from worldly desires and worries).

அருளியவர்: பேயாழ்வார்
திவ்ய தேசம்: திரு அட்டபுயக்கரம்

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு.

(மூன்றாம் திருவந்தாதி - 99)

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு.

(மூன்றாம் திருவந்தாதி - 99)

thotta padaiyettum thOlaadha vendriyaan
atta buyakaraththaan anjnaandru kuttaththu
kOL mudhalai thunja kuRitherindha sakkaraththaan
thaaL mudhale nangatku chaarvu.

(moondraam thiruvandhaadhi - 99)

With eight hands wielding eight victorious weapons that have never seen defeat, the Lord of Attabuyakaram is our sole refuge. He wielded his discus over a crocodile and saved an elephant in the yore.

மந்தி பாய்வட வேங்கட மாமலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்*
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்*
உந்தி மேலதன் றோ!அடி யேனுள்ளத் தின்னுயிரே !

மந்தி பாய் வடவேங்கட மாமலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலது அன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !
 

mandhi paay vada venkata maa malai vaanavargaL
sandhi seyya ninRaan arangathu aravin aNaiyaan
andhi pOl niRaththu aadaiyum adhan mEl ayanai padaithadhu Or ezhil
undhi meladhu anRo ! adiyen uLLaththu innuyire !

He stands in the monkey forest of Venkatam hills over the North, worshipped by the celestials. He reclines on a serpent in Arangam. Over His sunset-red vesture, the beautiful lotus-seat of Brahma rises from His navel, captivating my heart and spirit !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com