அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து

குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து

பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு

நரிப் படைக்கு ஓர் பாகுடம் போலே

கோடி மூடு எடுப்பதன் முன்னம்,

கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு

கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால்,

குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப

வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்

தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம்

தாரமும் ஒரு பக்கம் அலற்ற

தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம்,
செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம்
ஆய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு,
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செத்துப் போவதோர் போது நினைந்து

செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்

பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச்

செய்த மாலை இவை பத்தும் வல்லார்

சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல்

சென்ற சிந்தை பெறுவர் தாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காசும் கறை உடைக் கூறைக்கும்

அங்கு ஓர் கற்றைக்கும்

ஆசையினால் அங்கு அவத்தப்

பேர் இடும் ஆதர்காள் !

கேசவன் பேர் இட்டு நீங்கள்

தேனித்து இருமினோ,

நாயகன் நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங்கு ஓர் கூறை அரைக்கு

உடுப்பதன் ஆசையால்

மங்கிய மானிட சாதியின்

பேர் இடும் ஆதர்காள் !

செங்கண் நெடுமால்! சிரீதரா !

என்று அழைத்தக்கால்

நங்கைகாள்! நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உச்சியில் எண்ணெயும் சுட்டியும்

வளையும் உகந்து

எச்ச்ம் பொலிந்தீர்காள் ! என்

செய்வான் பிறர் பேர் இட்டீர்?

பிச்சை புக்கு ஆகிலும்

எம்பிரான் திருநாமமே

நச்சுமின், நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மானிட சாதியில் தோன்றிற்று ஓர்

மானிட சாதியை

மானிட சாதியின் பேர் இட்டால்

மறுமைக்கு இல்லை;

வான் உடை மாதவா! கோவிந்தா !

என்று அழைத்தக்கால்

நான் உடை நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று

ஓர் மல ஊத்தையை

மலம் உடை ஊத்தையின் பேர்

இட்டால் மறுமைக்கு இல்லை ;

குலம் உடைக் கோவிந்தா ! கோவிந்தா !
என்று அழைத்தக்கால்
நலம் உடை நாரணன் தம்
அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாடும் நகரும் அறிய

மானிடப் பேர் இட்டுக்

கூடி அழுங்கிக் குழியில்

வீழ்ந்து வழுக்காதே

சாடு இறப் பாய்ந்த தலைவா !

தாமோதரா ! என்று

நாடுமின் ; நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மண்ணிற் பிறந்து மண் ஆகும்

மானிடப் பேர் இட்டு அங்கு

எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்

ஏழை மனிசர்காள் !

கண்ணுக்கு இனிய கருமுகில்

வண்ணன் நாமமே

நண்ணுமின் ; நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com