அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நம்பி பிம்பி என்று நாட்டு

மானிடப் பேர் இட்டால்

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு

நாளில் அழுங்கிப் போம்;

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர்

இட்டு அழைத்தக்கால்,

நம்பிகாள் ! நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஊத்தைக் குழியில் அமுதம்

பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில்

வண்ணன் பேர் இட்டு

கோத்துக் குழைத்துக் குணாலம்

ஆடித் திரிமினோ !

நாத் தகு நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீர் அணி மால் திருநாமமே

இடத் தேற்றிய

வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன்

விரித்த சொல்

ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு

ஒன்றும் வல்லவர்

பேர் அணி வைகுந்தத்து என்றும்

பேணி இருப்பரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்

தடிந்த எம் தாசரதி போய்

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட

எம் புருடோத்தமன் இருக்கை;

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே

கடு வினை களைந்திட கிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்

சந்திரன் வெங்கதிர் அஞ்ச

மலர்ந்து எழுந்து அணவு மணிவண்ண உருவின்

மால் புருடோத்தமன் வாழ்வு ;

நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்

நாரணன் பாதத் துழாயும்

கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி

அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு

எதிர் முக அசுரர் தலைகளை இடறும்

எம் புருடோத்தமன் இருக்கை;

சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்

சங்கரன் சடையினில் தங்கிக்

கதிர் முக மணிகொண்டு இழி புனற் கங்கைக்

கண்டம் என்னும் கடி நகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள

ஏற்று வந்து எதிர் பொரு சேனை

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்

நம் புருடோத்தமன் நகர்தான்;

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்

இரு கரை உலகு இரைத்து ஆடக்

கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும்

ஒண் சுடர் ஆழியும் சங்கும்

மழுவொடு வாளும் படைக்கலம் உடைய

மால் புருடோத்தமன் வாழ்வு ;

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்

இறைப் பொழுது அளவினில் எல்லாம்

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடி நகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தலைப்பெய்து குமுறிச் சலம் பொதி மேகம்

சலசல பொழிந்திடக் கண்டு

மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை

மால் புருடோத்தமன் வாழ்வு;

அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்

அவபிரதம் குடைந்து ஆடக்

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி

மேல் இருந்தவன் தலை சாடி

மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த

மால் புருடோத்தமன் வாழ்வு;

அற்புதம் உடைய ஐராவத மதமும்

அவர் இளம்படியர் ஒண் சாந்தும்

கற்பக மலரும் கலந்து இழி கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com