அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த

காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை ;

கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்

பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை

அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை ;

குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை

நில மலை நீண்ட மலை திரு மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்

ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை ;

பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத்

தோண்டல் உடைய மலை ; தொல்லை மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்

இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை ;

கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்

இனம் குழு ஆடும் மலை ; எழில் மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய

வரி சிலை வாயிற் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த

அரையன் அமரும் மலை ; அமரரொடு கோனும் சென்று

திரிசுடர் சூழும் மலை ; திரு மாலிருஞ் சோலையதே

.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கோட்டுமண் கொண்டு இடந்து குடங் கையில் மண் கொண்டு அளந்து

மீட்டும் அஃது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை ;

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று

ஒட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆயிரம் தோள் பரப்பி, முடி ஆயிரம் மின் இலக,

ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை ;

ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்

ஆயிரம் பூம்பொழிலும் உடை மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாலிருஞ் சோலை என்னும் மலையை உடைய மலையை

நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக் கடல் அமுதை

மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்

மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நா அகாரியம் சொல் இலாதவர்

நாள்தொறும் விருந்து ஓம்புவார்

தேவ காரியம் செய்து வேதம்

பயின்று வாழ் திருக்கோட்டியூர்

மூவர் காரியமும் திருத்தும்

முதல்வனைச் சிந்தியாத அப்

பாவகாரிகளைப் படைத்தவன்

எங்ஙனம் படைத்தான் கொலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக்

குருக்களுக்கு அனுகூலராய்ச்

செற்றம் ஒன்றும் இலாத வண்கையி

னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த்

துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி

வண்ணன் தன்னைத் தொழாதவர்

பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு

நோய்செய்வான் பிறந்தார்களே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com