அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில், கஞ்சன்தன்

ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை ;

கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்

சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை ;

ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்

சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல்

முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை ;

கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற்கோன்

தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங்கானிடைச்

சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை ;

அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச்
சிறுகாலைப் பாடும் தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்

அந்திப் பலி கொடுத்து ஆவர்த்தனம் செய் அப்பன் மலை;

இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான்

சிந்தும் புறவில் தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

எட்டுத் திசையும் எண்இறந்த பெருந் தேவிமார்

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை;

பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த்

தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னைக்

கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை

விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்

கருதி உரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற

உருப்பனை ஒட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை ;

பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்

வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை;

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச்

செஞ்சுடர் நா வளைக்கும் திரு மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து

கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை ;

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று

பொன் அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com