திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்யகண்ணா !
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா !
ஒருவற்காற்றி உய்யும்வகை என்றால்
உடனின்றைவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்,
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.
(பெரிய திருமொழி - 7-7-1)

உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற*
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத் தம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்ற தாமென சிந்தனையே !

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனையே !

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி, எறிஞர் அரணழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை, உலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.
(பெரிய திருமொழி - 6.10.1)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 3

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

(திருவாய்மொழி - 3.3.8)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருவனந்தபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 2

கெடும் இடராய வெல்லாம் 'கேசவா !' என்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே.

(திருவாய்மொழி - 10.2.1)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட

காலை மாலைகம லமலர் இட்டுநீர்

வேலைமோ தும்மதில் சூழ்திருக் கண்ணபுரத்து

ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட

காலை மாலை கமல மலர் இட்டுநீர்

வேலை மோதும் மதில் சூழ் திருக்கண்ணபுரத்து

ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை
எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி 8-9-1)

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் !
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே !
(பெரிய திருமொழி 7-9-1)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 5

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

(திருவாய்மொழி 10-5-1)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருப்பேர் நகர்

பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய் !
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் !

(பெரியாழ்வார் திருமொழி 2-5-1)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com