பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி - 1.8.5)

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே !
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் !
பாடா வருவேன் வினையாயின பாற்றே.
(பெரிய திருமொழி - 4.7.5)

 

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திறம்பாதென் நெஞ்சமே ! செங்கண்மால் கண்டாய்*
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்* - புறந்தான் இம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்* வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி
(முதல் திருவந்தாதி - 96)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருவெள்ளறை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 3

முன்னிவ் வேழுல குணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுதேத்த*
அன்ன மாகியன் றருமறை பயந்தவனே ! எனக் கருள்புரியே *
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்*
தென்ன என்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே !
(பெரிய திருமொழி - 5.3.8)

முன் இவ்வேழுலகு உணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அருமறை பயந்தவனே ! எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்றிவை வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே !

(பெரிய திருமொழி  5-3-8)

பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு.
(மூன்றாம் திருவந்தாதி - 60)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3224
முதல் திருவந்தாதி

குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே - என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு.
(முதல் திருவந்தாதி - 41)

தமர் உள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண்பொருப்புவேலை* - தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
(இரண்டாம் திருவந்தாதி - 70)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே.
(திருவாய்மொழி - 1-8-4)

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலிமண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
(பெரிய திருமொழி - 6-8-1)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநறையூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 5

கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே.
(பெரிய திருமொழி - 6-5-1)

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே.

(பெரிய திருமொழி - 6-5-1)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com