தோலாத வென்றியான் அட்டபுயகரத்தான்

அருளியவர்: பேயாழ்வார்
திவ்ய தேசம்: திரு அட்டபுயக்கரம்

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு.

(மூன்றாம் திருவந்தாதி - 99)

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு.

(மூன்றாம் திருவந்தாதி - 99)

thotta padaiyettum thOlaadha vendriyaan
atta buyakaraththaan anjnaandru kuttaththu
kOL mudhalai thunja kuRitherindha sakkaraththaan
thaaL mudhale nangatku chaarvu.

(moondraam thiruvandhaadhi - 99)

With eight hands wielding eight victorious weapons that have never seen defeat, the Lord of Attabuyakaram is our sole refuge. He wielded his discus over a crocodile and saved an elephant in the yore.

[பொருள்]

முன்னொரு நாள், தாமரை மலர்ப் பொய்கையில், வலியதோர் முதலையிடம் அகப்பட்ட தன் பக்தனான கஜேந்திரனைக் காக்க தன் சுதர்சன சக்கரத்தை எறிந்த திருமால், "அட்டபுயகரத்தான்" என்ற பெயரில் அட்டபுயக்கரம் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கிறான். தன்னை அண்டியவரைக் காக்க எட்டுக் கரங்களிலும் ஆயுதம் தரித்திருக்கும் கோலத்தில் அவன் இங்கு காட்சியளிக்கிறான். அவன் விடுக்கும் ஆயுதங்கள் எவையும் என்றும் தோல்வியை அடைந்ததே இல்லை. என்றும் வெற்றியை உடைய அந்தத் திருமாலின் பாதங்களே நமக்கு அடைக்கலம்.

(சொற்பொருள்)

படை - ஆயுதம்

தோலாத - தோல்வி அடையாத

அட்டம் - எட்டு (அஷ்டம் => அட்டம்)

புயம் - தோள் (அஷ்டபுஜம் => அட்டபுயம்)

ஞான்று - காலம்

அஞ்ஞான்று - அன்றொரு காலம்

குட்டம் - குளம்

கோள் - வலிமை

நங்கட்கு - நமக்கு

வென்றியான் - வெற்றியை உடையவன்

தாள்முதல் - (திருமால்) பாதம்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com