வைகலும் வெண்ணெய் கைகலந்து உண்டான்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி - 1.8.5)

[பொருள்]

திருவாய்ப்பாடியில், ஆயர் மனைகளில் தினமும் புகுந்து, மிகுந்த விருப்போடு தன் கைகளால் வெண்ணெய்க் கலங்களை  அளைந்து, கைகளில் அகப்பட்ட வெண்ணெயை மகிழ்ச்சியுடன் உண்ட கண்ணன், சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இன்று என் உடலில் கலந்தான்.

ஆய்ச்சியர் கடைந்த வெண்ணெய் எவ்வளவு விருப்பமோ அதே அளவிற்கு ஆழ்வாரின் உடலும் பகவானுக்கு விருப்பமானதாயிற்று என்பது முன்னோர் உரை.

(சொற்பொருள்)

வைகலும் - தினந்தோறும்
மெய் - உடல் (இங்கு நம்மாழ்வார் திருமேனி)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com