மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திறம்பாதென் நெஞ்சமே ! செங்கண்மால் கண்டாய்*
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்* - புறந்தான் இம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்* வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி
(முதல் திருவந்தாதி - 96)

[பொருள்]

என் நெஞ்சமே ! உயிர்களிடத்தில் கருணையைப் பொழியும் அழகான, செவ்வரி ஓடிய கண்களை உடைய திருமால், அறத்துடன் கூடிய புண்ணிய காரியங்கள், அறத்திற்கு புறம்பான பாவ காரியங்கள் என்ற இரண்டு வகையான காரியங்களுக்கும் பலன் அளிப்பவன் ஆவான். அவனே இந்தப் புவியாகவும், அலைகடலாகவும், காற்றாகவும், வானாகவும், இவற்றைக் கடந்த விஷயமாகவும் உள்ளான். ஆகையால் நீ தவறாமல் அவனையே பற்றி, அவன் அருளையே எதிர்பார்த்து இருப்பாயாக.

(சொற்பொருள்)

(திறம்பாது) - தவற விடாது
(மறிகடல்) - அலைகள் துள்ளும் கடல் (மறிதல் - துள்ளுதல்)
(செங்கண்) - செம்மை + கண் [செம்மை - நேர்மை, தூய்மை, அழகு, சிவப்பு]
(மாருதம்) - காற்று
(கடைக்கண்) - அருள்; முடிவு

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com