பணிலம் வாய் வைத்து உகந்தான்

பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு.
(மூன்றாம் திருவந்தாதி - 60)

[பொருள்]

திருமால், முன்னொரு காலம் (துவாபர யுகத்தில்) கிருஷ்ணனாக அவதாரம் செய்த பொழுது, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, மாடு கன்றுகளை பெருமழையினின்று காத்தான்; உரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து சென்று இரட்டை மருத மரங்களைச் சாய்த்தான்; தாயுருவாகி வந்த பூதனை என்னும் பேயின் உயிர் உண்டான்; சகடாசுரனைத் திருப்பாதங்களால் உதைத்தான்; விளங்கனிக்கு வத்சாசுரனை எறிந்தான்; பாரத யுத்தத்தில் தன் பாஞ்சசன்னியம் என்னும் சங்கினை ஊதி மகிழ்ந்தான்.

(சொற்பொருள்)

பண்டு - முன்னொரு காலம்
பிணை மருதம் - இரட்டை மருத மரங்கள்
பெற்றம் - பசுமாடு
சகடம் - சக்கரம்
கற்று - கன்று (கற்று என மருவியது)
குணில் - குறுந்தடி
பணிலம் - சங்கு

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com