அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்

உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே,

அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்

வண்டு ஓத்து இருண்ட குழல்வாராய், அக்காக்காய்!

மாயவன்தன் குழல்வாராய் , அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உந்தி எழுந்த உருவ மலர்தன்னில்

சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன்

கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித்

தந்தத்தின் சீப்பால் குழல்வாராய், அக்காக்காய்!

தாமோதரன் தன் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த

முன்இவ் உலகினை முற்றும் அளந்தவன்

பொன்னின் முடியினைப் பூஅணைமேல் வைத்துப்

பின்னே இருந்து குழல்வாராய், அக்காக்காய்!

பேர்ஆயிரத்தான் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்

வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்

விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்

கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com