அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 9

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்;
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே.

(திருவாய்மொழி - 10.9.4)

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின், எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர், கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள் மடுத்தே.

(திருவாய்மொழி - 10.9.5)

வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள், வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே.

(திருவாய்மொழி - 10.9.6)

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்; தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே.

(திருவாய்மொழி - 10.9.7)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com