அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்

பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்;

என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ !
நின்முகம் கண்ணுள ஆகில் , நீ இங்கே நோக்கிப் போ

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்

தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் ;

அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் ,

மஞ்சில் மறையாதே , மா மதீ ! மகிழ்ந்து ஓடி வா .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

சுற்றம் ஓளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் ;

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே, அம்புலீ ! கடிது ஓடி வா .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து

ஒக்கலைமேல் இருத்து உன்னையே சுட்டிக் காட்டும், காண்;

தக்கது அறிதியேல், சந்திரா ! சலம் செய்யாதே ;

மக்கட் பெறாத மலடன் அல்லையேல், வா, கண்டாய் .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com