அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்;
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் ;
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் ,
மஞ்சில் மறையாதே , மா மதீ ! மகிழ்ந்து ஓடி வா .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சுற்றம் ஓளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் ;
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே, அம்புலீ ! கடிது ஓடி வா .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலைமேல் இருத்து உன்னையே சுட்டிக் காட்டும், காண்;
தக்கது அறிதியேல், சந்திரா ! சலம் செய்யாதே ;
மக்கட் பெறாத மலடன் அல்லையேல், வா, கண்டாய் .
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com