அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த்
திருச்சக்கரம் ஏந்து கையன்
உள்ள இடம் வினவில், உமக்கு
இறை வம்மின், சுவடு உரைக்கேன்;
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித்
தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை ஆகிப் பாரதம்
கைசெய்யக் கண்டார் உளர்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற
அரசர்கள்தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன்
தேவகி தன் சிறுவன்
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப்
பாழில் உருளப் படை பொருதவன்
பக்கமே கண்டார் உளர்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மண்ணும் மலையும் மறிகடல்களும்
மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச்
சிக்கென நாடுதிரேல்,
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி
இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு
மணந்தானைக் கண்டார் உளர்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கரிய முகில் புரை மேனி மாயனைக்
கண்ட சுவடு உரைத்துப்
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி
விளை கழனிப் புதுவைத்
திருவிற் பொலி மறைவாணன் பட்டர்பிரான்
சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார்
பரமன் அடிசேர்வர்களே.
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com