அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும்
அழகா ! நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்,
நான் உயிர் வாழ்ந்திருந்தேன் ;
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
பாற்கடல் வண்ணா ! உன்மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த
கள்ள அசுரர் தம்மைச்
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும் ;
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கேட்டு அறியாதன கேட்கின்றேன், கேசவா !
கோவலர் இந்திரற்குக்
காட்டிய சோறும் கறியும் தயிரும்
கலந்து உடன் உண்டாய் போலும் ;
ஊட்டமுதல் இலேன் உன்தன்னைக்கொண்டு
ஒருபோதும் எனக்கு அரிது;
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா ! உன்னை
அஞ்சுவன் இன்று தொட்டும்
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
திண் ஆர் வெண்சங்கு உடையாய் ! திருநாள் திரு -
வோணம் இன்று ஏழு நாள் ; முன் ,
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்
பல்லாண்டு கூறுவித்தேன் ;
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது,
அரிசியும் ஆக்கி வைத்தேன் ;
கண்ணா ! நீ நாளைதொட்டுக் கன்றின் பின் போகேல்.
கோலம் செய்து இங்கே இரு
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com