அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும்

அழகா ! நீ பொய்கை புக்கு

நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்,

நான் உயிர் வாழ்ந்திருந்தேன் ;

என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ?
ஏதும் ஓர் அச்சம் இல்லை ;
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் ,
காயாம்பூ வண்ணம் கொண்டாய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய

பாற்கடல் வண்ணா ! உன்மேல்

கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த

கள்ள அசுரர் தம்மைச்

சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே

விளங்காய் எறிந்தாய் போலும் ;

என்றும் என்பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள்
அங்ஙனம் ஆவர்களே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கேட்டு அறியாதன கேட்கின்றேன், கேசவா !

கோவலர் இந்திரற்குக்

காட்டிய சோறும் கறியும் தயிரும்

கலந்து உடன் உண்டாய் போலும் ;

ஊட்டமுதல் இலேன் உன்தன்னைக்கொண்டு

ஒருபோதும் எனக்கு அரிது;

வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா ! உன்னை

அஞ்சுவன் இன்று தொட்டும்


அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திண் ஆர் வெண்சங்கு உடையாய் ! திருநாள் திரு -

வோணம் இன்று ஏழு நாள் ; முன் ,

பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்

பல்லாண்டு கூறுவித்தேன் ;

கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது,

அரிசியும் ஆக்கி வைத்தேன் ;

கண்ணா ! நீ நாளைதொட்டுக் கன்றின் பின் போகேல்.

கோலம் செய்து இங்கே இரு

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com