அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
நல்லது ஓர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேல் பனி சோர,
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு,
அழகழிந்தாள் ஒத்ததாலோ!
இல்லம் வெறியோடிற்றாலோ !
என்மகளை எங்கும் காணேன்;
மல்லரை அட்டவன் பின் போய்
மதுரைப் புறம் புக்காள் கொல்லோ ?
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத
உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே,
கன்னி இருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான்;
நாராயனன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓர்
ஏச்சுக்கொல் ஆயிடுங் கொல்லோ?
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
குமரி மணம் செய்து கொண்டு ,
கோலம் செய்து இல்லத்து இருத்தி,
தமரும் பிறரும் அறியத்
தாமோதரற்கு என்று சாற்றி ,
அமரர் பதியுடைத் தேவி
அரசாணியை வழிபட்டு,
துமிலம் எழப் பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொல்லோ?
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஒரு மகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்;
செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ ?
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com