அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 951
பெரிய திருமொழி : 1

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி

வேல்கணார் கலவியே கருதி

நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்

என் செய்கேன் ! நெடு விசும்பு அணவும்

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட

பாழியான், ஆழியான் அருளே

நன்று நான் உய்ய, நான் கண்டு konDEn

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.4)

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்

எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள்,

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி

அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்;

வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி,

நம்பிகாள் ! உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.6)

இல் பிறப்பு அறியீர், இவர் அவர் என்னீர்,

இன்னது ஓர் தன்மை என்று உணரீர்,

கற்பகம் ! புலவர் களைகண் ! என்று உலகில்

கண்டவா தொண்டரைப் பாடும்

சொல் பொருள் ஆளீர் ! சொல்லுகேன் வம்மின்;

சூழ் புனல் குடந்தையே தொழுமின்;

நல் பொருள் காண்மின்; பாடி நீர் உய்மின்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.7)

கற்றிலேன் கலைகள்; ஐம்புலன் கருதும்

கருத்துளே திருத்தினேன் மனத்தை;

பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை;

பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்,

செற்றமே வேண்டி திரி தருவேன்; தவிர்ந்தேன்;

செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி

நல் துணையாகப் பற்றினேன் அடியேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.8)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com