அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருக்குடந்தை
பாசுர எண்: 951
பெரிய திருமொழி
: 1
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
என் செய்கேன் ! நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட
பாழியான், ஆழியான் அருளே
நன்று நான் உய்ய, நான் கண்டு konDEn
நாராயணா என்னும் நாமம்.
(பெரிய திருமொழி 1.1.4)
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருத்தஞ்சை மாமணிக்கோவில்
பாசுர எண்: 953
பெரிய திருமொழி
: 1
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள்,
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்;
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள் ! உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
(பெரிய திருமொழி 1.1.6)
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருத்தஞ்சை மாமணிக்கோவில்
பாசுர எண்: 954
பெரிய திருமொழி
: 1
இல் பிறப்பு அறியீர், இவர் அவர் என்னீர்,
இன்னது ஓர் தன்மை என்று உணரீர்,
கற்பகம் ! புலவர் களைகண் ! என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் ! சொல்லுகேன் வம்மின்;
சூழ் புனல் குடந்தையே தொழுமின்;
நல் பொருள் காண்மின்; பாடி நீர் உய்மின்
நாராயணா என்னும் நாமம்.
(பெரிய திருமொழி 1.1.7)
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருத்தஞ்சை மாமணிக்கோவில்
பாசுர எண்: 955
பெரிய திருமொழி
: 1
கற்றிலேன் கலைகள்; ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை;
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை;
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்,
செற்றமே வேண்டி திரி தருவேன்; தவிர்ந்தேன்;
செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணையாகப் பற்றினேன் அடியேன்
நாராயணா என்னும் நாமம்.
(பெரிய திருமொழி 1.1.8)
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com