ஏவல்ல எந்தைக்கு இடம்

தமர் உள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண்பொருப்புவேலை* - தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
(இரண்டாம் திருவந்தாதி - 70)

[பொருள்]

அடியார்கள் உள்ளம், தஞ்சை மாமணிக்கோயில், திவ்ய தேசங்களுள் முதன்மையான திருவரங்கம், திருதண்கால், அடியார்கள் நினைந்து மகிழும்  குளிர்ச்சி பொருந்திய திருவேங்கட மலை மற்றும் திருப்பாற்கடல், திருக்கடல்மல்லை, திருக்கோவலூர், மதில்களோடு கூடிய திருக்குடந்தை - இவை யாவும் தன் அம்புகளால் எதிரிகளை (பக்தி செய்ய இடையூறாக இருக்கும் விரோதிகளை) ஒழிக்க வல்ல என் தந்தை, சுந்தரவில்லி இராமன் உறைகன்ற இடங்களாகும்.

(சொற்பொருள்)

தமர் - அடியவர்
தண் - தண்மை (குளிர்ச்சி)
பொருப்பு - மலை (வேங்கடம்)
வேலை - திருப்பாற்கடல்
உள்ளும் - உகந்து நினைக்கும்
- அம்பு
ஏ வல்ல - அம்புகள் எய்வதில் வல்ல

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com