பிரிதி சென்று அடை நெஞ்சே - 4

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 961
பெரிய திருமொழி : 2

மறங்கொ ளாளரி யுருவென வெருவர

ஒருவன தகல்மார்வம்

திறந்து* வானவர் மணிமுடி பணிதர

இருந்த நல் இமயத்துள்*

இறங்கி யேனங்கள் வளைமருப் பிடந்திடக்

கிடந்தரு கெரிவீசும்*

பிறங்கு மாமணி யருவியொ டிழிதரு

பிரிதிசென் றடைநெஞ்சே !

மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர

ஒருவனது அகல் மார்வம்

திறந்து வானவர் மணிமுடி பணி தர

இருந்த நல் இமயத்துள்

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்

கிடந்து அருகு எரி வீசும்

பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.4)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com