பிரிதி சென்று அடை நெஞ்சே - 5

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 962
பெரிய திருமொழி : 2

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த*

அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள் செயும்

பிரிதிசென் றடைநெஞ்சே !

(1.2.5)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுது ஏத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.5)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com