குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 3

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

(திருவாய்மொழி - 3.3.8)

[பொருள்]

கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி, பிருந்தாவனத்தில் வாழ்ந்த உயிர்களுக்கு அடைக்கலம் அளித்தவன். திரிவிக்ரம அவதாரம் செய்து உலகங்களை அளந்தவன். பரம்பொருள் ஆனவன். அவன் விரும்பி உறையும் இடம் திருவேங்கடம் என்னும் பெரிய மலை. அந்த மலை ஒன்றைத் தொழுதாலே நம் வினைகள் அனைத்தும் மாய்ந்து போகும்.

(சொற்பொருள்)

ஞாலம் - உலகம்
குன்றம் - இப்பாசுரத்தில் கோவர்த்தன மலையைக் குறிக்கிறது.
பரன் - பரம்பொருள்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com