அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங்கு ஓர் கூறை அரைக்கு

உடுப்பதன் ஆசையால்

மங்கிய மானிட சாதியின்

பேர் இடும் ஆதர்காள் !

செங்கண் நெடுமால்! சிரீதரா !

என்று அழைத்தக்கால்

நங்கைகாள்! நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உச்சியில் எண்ணெயும் சுட்டியும்

வளையும் உகந்து

எச்ச்ம் பொலிந்தீர்காள் ! என்

செய்வான் பிறர் பேர் இட்டீர்?

பிச்சை புக்கு ஆகிலும்

எம்பிரான் திருநாமமே

நச்சுமின், நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மானிட சாதியில் தோன்றிற்று ஓர்

மானிட சாதியை

மானிட சாதியின் பேர் இட்டால்

மறுமைக்கு இல்லை;

வான் உடை மாதவா! கோவிந்தா !

என்று அழைத்தக்கால்

நான் உடை நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று

ஓர் மல ஊத்தையை

மலம் உடை ஊத்தையின் பேர்

இட்டால் மறுமைக்கு இல்லை ;

குலம் உடைக் கோவிந்தா ! கோவிந்தா !
என்று அழைத்தக்கால்
நலம் உடை நாரணன் தம்
அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாடும் நகரும் அறிய

மானிடப் பேர் இட்டுக்

கூடி அழுங்கிக் குழியில்

வீழ்ந்து வழுக்காதே

சாடு இறப் பாய்ந்த தலைவா !

தாமோதரா ! என்று

நாடுமின் ; நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மண்ணிற் பிறந்து மண் ஆகும்

மானிடப் பேர் இட்டு அங்கு

எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்

ஏழை மனிசர்காள் !

கண்ணுக்கு இனிய கருமுகில்

வண்ணன் நாமமே

நண்ணுமின் ; நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நம்பி பிம்பி என்று நாட்டு

மானிடப் பேர் இட்டால்

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு

நாளில் அழுங்கிப் போம்;

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர்

இட்டு அழைத்தக்கால்,

நம்பிகாள் ! நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஊத்தைக் குழியில் அமுதம்

பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில்

வண்ணன் பேர் இட்டு

கோத்துக் குழைத்துக் குணாலம்

ஆடித் திரிமினோ !

நாத் தகு நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீர் அணி மால் திருநாமமே

இடத் தேற்றிய

வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன்

விரித்த சொல்

ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு

ஒன்றும் வல்லவர்

பேர் அணி வைகுந்தத்து என்றும்

பேணி இருப்பரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்

தடிந்த எம் தாசரதி போய்

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட

எம் புருடோத்தமன் இருக்கை;

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே

கடு வினை களைந்திட கிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டம் என்னும் கடிநகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com