அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
கோகுலம் (திருவாய்ப்பாடி)
பாசுர எண்: 182
பெரியாழ்வார் திருமொழி
: 7
ஆனிரை மேய்க்கநீ போதி, அருமருந் தாவ தறியாய்
கானகம் எல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே ! செண்பகப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி - 2.7.1)
ஆனிரை மேய்க்கநீ போதி, அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே ! செண்பகப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி - 2.7.1)
aanirai mEykkanee pOdhi arumarundhu aavadhu aRiyaay
kaanagam ellaam thirindhu un kariya thirumeni vaada
paanaiyil paalai parugi patraadhaar ellaam sirippa
thEnil iniya piraanE ! senbaga poochootta vaaraay.
(Periyazhvar Thirumozhi - 2.7.1).
O Lord sweeter than honey! Unfriendly folks laugh at you when you drink the milk from the pitcher and get punished. You go after the grazing cows, and roam the forest everywhere letting your bright face wither. You do not know you are our precious medicine. Come, wear these Senbakam flowers on your coiffure.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ராயகை)
, திருத்வாரகை (துவாரகா)
, திருவடமதுரை (மதுரா)
, திருவதரியாச்சரமம் (பத்ரிநாத்)
, திருவயோத்தி (அயோத்தி)
பாசுர எண்: 399
பெரியாழ்வார் திருமொழி
: 7
வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி* இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை* தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி* கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
கோகுலம் (திருவாய்ப்பாடி)
பாசுர எண்: 440
பெரியாழ்வார் திருமொழி
: 1
வண்ண மால்வரையே குடையாக
மாரி காத்தவனே ! மதுசூதா ! *
கண்ணனே ! கரி கோள் விடுத்தானே !
காரணா ! களிறட்ட பிரானே !
எண்ணுவார் இடரைக் களைவானே !
ஏத்த அரும் பெரும் கீர்த்தியினானே !
நண்ணி நான் உன்னை நாடொறும் ஏத்தும்
நன்மையே அருள் செய் எம்பிரானே !
(பெரியாழ்வார் திருமொழி - 5-1-8)
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருப்பேர் நகர்
பாசுர எண்: 162
பெரியாழ்வார் திருமொழி
: 5
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய் !
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் !
(பெரியாழ்வார் திருமொழி 2-5-1)
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com