அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மருமகன்தன் சந்ததியை

உயிர்மீட்டு மைத்துனன்மார்

உருமகத்தே வீழாமே

குருமுகமாய்க் காத்தான் ஊர்;

திருமுகமாய்ச் செங்கமலம்

திருநிறமாய்க் கருங்குவளை

பொரு முகமாய் நின்று அலரும்

புனல் அரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்

கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு

ஈன்று எடுத்த தாயரையும்

இராச்சியமும் ஆங்கு ஒழிய,

கான் தொடுத்த நெறி போகிக்

கண்டகரைக் களைந்தான் ஊர்;

தேன் தொடுத்த மலர்ச் சோலைத்

திருவரங்கம் என்பதுவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெருவரங்கள் அவைபற்றிப்

பிழக்கு உடைய இராவணனை

உரு அரங்கப் பொருது அழித்து இவ்

உலகினைக் கண்பெறுத்தான் ஊர் ;

குரவு அரும்பக் கோங்கு அலரக்

குயில் கூவும் குளிர் பொழில் சூழ்

திருவரங்கம் என்பதுவே

என் திருமால் சேர்விடமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கீழ் உலகில் அசுரர்களைக்

கிழங்கிருந்து கிளராமே

ஆழி விடுத்து அவருடைய

கரு அழித்த அழிப்பன் ஊர் ;

தாழைமடல் ஊடு உரிஞ்சித்

தவள வண்ணப் பொடி அணிந்து

யாழின் இசை வண்டினங்கள்

ஆளம் வைக்கும் அரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com