அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மருமகன்தன் சந்ததியை
உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே
குருமுகமாய்க் காத்தான் ஊர்;
திருமுகமாய்ச் செங்கமலம்
திருநிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்று அலரும்
புனல் அரங்கம் என்பதுவே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்
கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும்
இராச்சியமும் ஆங்கு ஒழிய,
கான் தொடுத்த நெறி போகிக்
கண்டகரைக் களைந்தான் ஊர்;
தேன் தொடுத்த மலர்ச் சோலைத்
திருவரங்கம் என்பதுவே
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பெருவரங்கள் அவைபற்றிப்
பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்
உலகினைக் கண்பெறுத்தான் ஊர் ;
குரவு அரும்பக் கோங்கு அலரக்
குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே
என் திருமால் சேர்விடமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கீழ் உலகில் அசுரர்களைக்
கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய
கரு அழித்த அழிப்பன் ஊர் ;
தாழைமடல் ஊடு உரிஞ்சித்
தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள்
ஆளம் வைக்கும் அரங்கமே.
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com