அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
நம்பி பிம்பி என்று நாட்டு
மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு
நாளில் அழுங்கிப் போம்;
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர்
இட்டு அழைத்தக்கால்,
நம்பிகாள் ! நாரணன் தம்
அன்னை நரகம் புகாள்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஊத்தைக் குழியில் அமுதம்
பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில்
வண்ணன் பேர் இட்டு
கோத்துக் குழைத்துக் குணாலம்
ஆடித் திரிமினோ !
நாத் தகு நாரணன் தம்
அன்னை நரகம் புகாள்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சீர் அணி மால் திருநாமமே
இடத் தேற்றிய
வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன்
விரித்த சொல்
ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு
ஒன்றும் வல்லவர்
பேர் அணி வைகுந்தத்து என்றும்
பேணி இருப்பரே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
எம் புருடோத்தமன் இருக்கை;
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடு வினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே.
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com