அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருவல்லிக்கேணி
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 3
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்தன் தேர்முன் நின்றானை* சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 7
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோ ராளரியாய்* அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்* பைங்கண் ஆனைக்கொம்புகொண்டு பத்திமையால்* அடிக்கீழ்ச் செங்கண் ஆளி யிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருநைமிசாரண்யம்
பாசுர எண்: 998
பெரிய திருமொழி
: 6
வாள் நிலா முறுவல், சிறு நுதல், பெருந்தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்; எண்ணினேன்; எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் !
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருச்சாளக்கிராமம்
பாசுர எண்: 988
பெரிய திருமொழி
: 5
கலையும் கரியும் கரிமாவும் திரியும் கானம் கடந்து போய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து மலை கொண்டு அலை நீர் அணை கட்டி, மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலைபத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே !
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com