பாசுர எண்: 2733
திருவாய்மொழி : 10

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே !
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி ! நெடியாய் அடியே னாருயிரே !*
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே !*
குலதொல் லடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உனபாதம் கூடும் ஆறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)

ulagam unDa peru vaayaa ! ulapil keerththi ammaane !
nilavum sudar soozh oLi moorthy ! nediyaay ! adiyEn aaruyire !
thiladham ulagukkaai ninRa thiruvEngadaththu emperumaanE !
kula thol adiyEn una paadham koodum aaRu kooRaayE.
(Thiruvaimozhi - 6.10.1)

O Lord of eternal glory who swallowed the earth !
O great icon of effulgent knowledge, my soul's Master !
You stand like a "Tilaka for the earth" in Vengadam.
Pray decree that this bonded serf reaches Your lotus feet.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 2137
திருவாய்மொழி : 6

பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர் !
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே.

(திருவாய்மொழி 1.6.1)

பரிவதுஇல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர் !
பிரிவகை இன்றி நல்நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே.

(திருவாய்மொழி 1.6.1)

parivadhil eesanai paadi
virivadhu meval uruveer
pirivagai indri nanneer thooi
purivadhuvum pugai poove

(Thiruvaimozhi 1.6.1)

Seekers of infinte joy, do not give up ! Sing of the faultless Lord, offer flowers, incense and pure water.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 2159
திருவாய்மொழி : 8

ஓடும் புள்ளேறி* சூடும் தண்டுழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே !
(திருவாய்மொழி - 1.8.1)

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்

நீடு நின்றவை ஆடும் அம்மானே !

(திருவாய்மொழி - 1.8.1)

Odum puLLERi soodum thaN thuzhaai
needu ninRavai aadum ammaane !
(Thiruvaimozhi-1.8.1)

Our own Lord, He wears cool Tulasi, rides the Garuda bird and lives with eternals; He joyously accepts and reciprocates the love of His devotees.

பாசுர எண்: 2150
திருவாய்மொழி : 7

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்*
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை*
தூய அமுதைப் பருகிப் பருகி* என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே.
(திருவாய்மொழி - 1.7.3)

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்*
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை*
தூய அமுதைப் பருகிப் பருகி* என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே.
(திருவாய்மொழி - 1.7.3)​

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 2286
திருவாய்மொழி : 9

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்*
இறப்பில் எய்துக, எய்தற்க* யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை*
மறப்பொன் றின்றியென் றும்மகிழ் வேனே.
(திருவாய்மொழி - 2.9.5)

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்*
இறப்பில் எய்துக, எய்தற்க* யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை*
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வேனே.
(திருவாய்மொழி - 2.9.5)

siRappil veedu suvarkgam naragam
iRappil eidhuga, eidharkka* yaanum
piRappil palpiRavi perumaanai
maRappu ondRu indRi endRum magizhvEnE.
(Thiruvaimozhi - 2.9.5)

At the end of this birth, I am prepared for any eventuality. I may attain liberation or go to heaven or go to hell. It is immaterial to me, for I have resolved to meditate on the birthless Lord, who for the sake of His devotees comes to this earth in various forms. Wherever I go to, I shall ever think upon His grace, His infinite auspicious qualities, His admirable ploys and exploits and be immersed in divine bliss.

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 2

கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்றுகை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!
இவள்திறத் தென்செய்கின் றாயே?

(திருவாய்மொழி 7.2.1)

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
'எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு?' என்னும்
இருநிலம் கைதுழா இருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?
(திருவாய்மொழி 7.2.1)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி - 1.8.5)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே.
(திருவாய்மொழி - 1-8-4)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 3

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

(திருவாய்மொழி - 3.3.8)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருவனந்தபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 2

கெடும் இடராய வெல்லாம் 'கேசவா !' என்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே.

(திருவாய்மொழி - 10.2.1)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com