அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கொழுப்பு உடைய செழுங்குருதி
கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்
பிணம் படுத்த பெருமான் ஊர் ;
தழுப்பு அரிய சந்தனங்கள்
தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து
அடிதொழும் சீர் அரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வல்எயிற்றுக் கேழலுமாய்
வாள்எயிற்றுச் சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும்
அவுணனையும் இடந்தான் ஊர் ;
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு
எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண்சங்கு ஊதும்
மதிள் அரங்கம் என்பதுவே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
குன்று ஆடு கொழு முகில் போல்
குவளைகள் போல் குரைகடல் போல்
நின்று ஆடு கணமயில் போல்
நிறம் உடைய நெடுமால் ஊர் ;
குன்று ஊடு பொழில் நுழைந்து
கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம்
மதிள் அரங்கம் என்பதுவே
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பரு வரங்கள் அவைபற்றிப்
படை ஆலித்து எழுந்தானைச்
செரு அரங்கப் பொருது அழித்த
திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்மாலை
விட்டுசித்தன் விரித்தன கொண்டு
இருவர் அங்கம் எரித்தானை
ஏத்த வல்லார் அடியாமே.
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com