அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
கோகுலம் (திருவாய்ப்பாடி)
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 8
வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி - 1.8.5)
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருவேங்கடம் (திருப்பதி)
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 7
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே !
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் !
பாடா வருவேன் வினையாயின பாற்றே.
(பெரிய திருமொழி - 4.7.5)
அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
முதல் திருவந்தாதி
திறம்பாதென் நெஞ்சமே ! செங்கண்மால் கண்டாய்*
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்* - புறந்தான் இம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்* வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி
(முதல் திருவந்தாதி - 96)
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருவெள்ளறை
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 3
முன்னிவ் வேழுல குணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுதேத்த*
அன்ன மாகியன் றருமறை பயந்தவனே ! எனக் கருள்புரியே *
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்*
தென்ன என்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே !
(பெரிய திருமொழி - 5.3.8)
முன் இவ்வேழுலகு உணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அருமறை பயந்தவனே ! எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்றிவை வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே !
(பெரிய திருமொழி 5-3-8)
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com