அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 1
கர விசும்பு எரி, வளி, நீர், நிலம் இவைமிசை
வரன் நவில், திறல், வலி, அளி, பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல்-நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி ஏழ, கூர்உகிரால் குடைவாய் மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி; மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே ! ஆள ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை , ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
நம்முடை நாயகனே ! நான்மறையின் பொருளே ! நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே ! வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருபவனே ! அம்ம ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வானவர்தாம் மகிழ, வன் சகடம் உருள, வஞ்ச முலைப்பேயின் நஞ்ச்ம் அது உண்டவனே ! கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் கன்றுஅது கொண்டு எறியும் கருநிற என்கன்றே தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை ; எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com